உலக ஹோமியோபதி தினம்:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம்
கொண்டாடப்படுகிறது.
ஹோமியோபதி என்பது மருத்துவர் சாமுவேல் ஹhனிமன் என்பவரால் 1796ஆம்
ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்று மருத்துவ முறையாகும். சாமுவேல்
ஹhனிமன் அவர்கள் 1755 ஆம் ஆண்டு ஏப்ரல்10 ஆம் தேதி பிறந்தார். அவரது
நினைவாக ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவ முறையானது வளர்ந்து வருகிறது. உலகம்
முழுவதும் மக்கள் ஹோமியோபதி மருத்துவத்தால் பயனடைந்து வருகின்றனர்.
ஹோமியோபதி மருத்துவம் பாதுகாப்பானதாகும், சிறந்த தன்மை,
பண்புகளைக்கொண்டது. இந்திய மக்கள் தொகையில் 10மூ மக்களுக்கு மேல்
இம்மருத்துவத்தினை சார்ந்துள்ளனர். ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ
வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப்பெற்றுள்ளது.
மொரார்ஜி தேசாய்:
முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் 1896 ஆம் ஆண்டு
பிப்ரவரி 29 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார். அந்த நாளில்
முன்னாள் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் 1896 இல் குஜராத்
மாநிலத்தில் பிறந்தார். இவர் இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய
பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ்
கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார்.
புனித பசார் மேல்நிலை பள்ளியில் அவர் மெட்ரிக் கல்வியை
முடித்தார். 1918இல் மும்பை மாகாணத்தில் வில்சன் சிவில் சேவையில் தனது
பட்டப்படிப்பை முடித்து, 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப்
பணிப்புரிந்தார். 1930 இல், மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை
அறிவித்தபோது தனது வேலையை இராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில்
இணைத்துக் கொண்டார். சுதந்திர போராட்டத்தின் போது இவர் மூன்று முறை
சிறையில் அடைக்கப்பட்டார். 1931ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் அவர்
உறுப்பினராக இணைந்தார். 1937 வரை குஜராத் காங்கிரஸ் குழுவின் செயலராக
செயல்பட்டார்.
1937ல் முதல் முறை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது மும்பை
மாகாணத்தில் திரு.பி.ஜி.கேர் தலைமையிலான வருவாய், வேளாண்மை, வனம் மற்றும்
கூட்டுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணிபுரிந்தார். அதன்பின், 1946ல்
மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அவர் மும்பையில் உள்துறை மற்றும்
வருவாய் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவரின் பணிகாலத்தின் போது, நில
வருவாய் துறையில் பாதுகாப்பு உரிமை மூலம் பல்வேறு திருத்தங்களைக்
கொண்டுவந்தார். 1952இல் இவர் பம்பாயின் முதல் அமைச்சராகப் பதவியேற்றார்.
அதன்பின், 1977 மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவின் பிரதம மந்திரியாக
பதவியேற்றார். இவர் தனது 83வது வயதில் பிரதமர் பதவியிலிருந்து
மட்டுமன்றி, அரசியலில் இருந்தும் அவர் ஓய்வுபெற்றார். அதன் பின்னர்,
மும்பை மாநகரத்தில் வாழ்ந்த அவர், 10 ஏப்ரல் 1995 ஆம் ஆண்டு தனது 99வது
வயதில் மறைந்தார்.
★வட அமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை என்று போற்றப்படும் ஜாக் மைனர்
1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி பிறந்தார்.
★1710 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட
விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
★1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி டைட்டானிக் பயணிகள் கப்பல், தனது
முதலாவதும் மற்றும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன்
துறையில் ஆரம்பித்தது.
★1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி உயிரியல் ஆயுத தடுப்பு உடன்பாட்டில்
74 நாடுகள் கையெழுத்திட்டன.
Apr 10, 2016
Share This
About இரா.விஜயராஜ், M.Sc, B.Ed (Mathematics), D.T.Ed.
Subscribe to:
Post Comments (Atom)
CATEGORIES
அன்பு
அறிந்து கொள்வோம்
அறிவோம்
அறிவோம் அறிவியல்
அறிவோம் கணிதம்
அறிவோம் தமிழ்
ஆன்மீகம்
இன்று பிறந்தவர்
இன்று பிறந்தவர்கள்
இயற்கை மருத்துவம்
இலக்கியம்
உங்களுக்குத் தெரியுமா?
உடல்நலம்
ஏன்? எதற்கு? எப்படி?
கணித மேதைகள்
கண்டுபிடிப்பாளர்கள்
கண்டுபிடிப்பு
கண்டுபிடிப்புகளும் சாதனைகளும்
கலைச்சொல்
கல்வி உளவியல்
காரணம் அறிவோம்
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள்
கொரோனா
கோவில்
சந்திர கிரகணம்
சுவாரசியமான தகவல்கள்
சூரிய கிரகணம்
சொல்லும் பொருளும்
ஜனவரி
ஜோதிடம்
டி.என்.பி.எஸ்.சி
டெட்
தமிழர் இசைக்கருவிகள்
தமிழ் அறிஞர்கள்
தமிழ் இலக்கணம்
தமிழ் எண்ணுறு
திராவிட மொழிக் குடும்பம்
திருக்குறள்
திருவிழா
திரைப்படம்
தெரிந்துகொள்வோம்
தொல்காப்பியம்
தொழில்நுட்பம்
நலத்திட்டங்கள்
நாளைந்து கேள்விகள்
நீதிக் கதைகள்
நூலகம் பற்றிய செய்திகள் TNPSC
நெல்
நோபல் பரிசு
பள்ளிப்பாடப்புத்தகம்
பழமொழிகள்
பாடல் வரிகள்
பாரதியார்
பிரித்தெழுதுக
பிறந்தநாள்
புவிசார் குறியீடு
பூக்கள்
பொங்கல் விழா
பொது அறிவியல்
பொது அறிவு
பொதுத்தமிழ்
மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள்
மரம்
மரம் தகவல்கள்
முக்கிய ஆண்டுகள்
முக்கிய தினங்கள்
முதன் முதலில்
முதல் தமிழ்க் கணினி
முதல் பெண்மணி
யார் இவர்
ராஜராஜ சோழர்
ராயப்பனூர்
வரலாறு
வரலாற்றில் இன்று
வாழ்க்கை
வாழ்வியல் சிந்தனை
விருதுகள்
விருந்தோம்பல்
விவசாயம்
No comments:
Post a Comment