Search This Blog

யார் இவர் ? ஜான் பென்னி குவிக் .

யார் இவர் ? ஜான் பென்னி குவிக் .


தமிழ்நாட்டின் தென் தேனி , மாவட்டங்களான திண்டுக்கல் , மதுரை , சிவகங்கை , இராமநாதபுரம் ஆகியவற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக் .

 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைகை வடிநிலப் பரப்பில் மழை பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் . மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாற்றில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதை அறிந்த இவர் அங்கு ஓர் அணை கட்ட முடிவு செய்தார் . கட்டுமானத்தின்போது இடையில் கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்தபோது தனது சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடித்தார் . அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அப் பகுதி மக்கள் தம் குழந்தைகளுக்குப் பென்னி குவிக் எனப் பெயர் சூட்டும் வழக்கம் இன்றும் உள்ளது .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url