Search This Blog

மார்ச் 21- உலக மன நலிவு நோய் தினம் (World Down Syndrome Day):

மார்ச் 21- உலக மன நலிவு நோய் தினம் 
(World Down Syndrome Day):



நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.


டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

டவுன் சிண்ட்ரோம் அல்லது மனநலிவு என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. பொதுவாக மனித உடலில் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களுக்கு 21வது ஜோடியில் குரோமோசோமின் கூடுதல் நகல் உள்ளது. இதுவே டவுன் சிண்ட்ரோம் குறைபாடு எனப்படுகிறது.
டவுன் சிண்ட்ரோம் (மனநலிவு) தினம்:
இந்தக் குறைபாட்டை கண்டுபிடித்தவர் பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் லாங்டன் டவுன் என்பதால், அவரின் பிற்பாதிப் பெயரால்  டவுன் என்று பெயரிடப்பட்டது. இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ. நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.


டவுண் சிண்ட்ரோம்’ அதாவது மன நலிவு ஒரு நோயல்ல; இது ஒரு குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே கருதவேண்டும்.

ஆனால் இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும். எல்லோரையும் போலவே, டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளவும் சமமாக நடத்தப்படவும் அனைத்து உரிமைகளும் உள்ளன என்பதை வலியுறுத்தவே இந்தத்தினம் கொண்டாடப் படுகிறது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url