Search This Blog

BREAKING: குரூப் 4 தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

BREAKING: குரூப் 4 தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு :


ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு -
டிஎன்பிஎஸ்சி
தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382 
பணியிடங்களுக்கு  ஜூலை 24ஆம்
தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும்
என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வு குறித்து,
சென்னையில் இன்ற செய்தியாளர்களை
சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலச்சந்திரன் முக்கிய
அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் காலியாகயிருக்கும் 7,382
பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம்
தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும்.
குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி
முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.
7,382 பணியிடங்களில், 81 பணியிடங்கள்
விளையாட்டுப் பிரிவினர் மூலம்
நிரப்பப்படும். 
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274.

 குரூப் 4 தேர்வு மூன்று
மணி நேரம் நடைபெறும். 9.30 மணி
முதல் 12.30 மணி வரை தேர்வு
நடைபெறும். இந்தத் தேர்வில் 300
மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள்
கேட்கப்படும். 100 கேள்விகள் தமிழ்
மொழி தொடர்பானதாவும், 75
கேள்விகள் பொது அறிவு
தொடர்புடையதாகவும் இருக்கும்.
90 மதிப்பெண்களுக்கு மேல்
பெறுபவர்களின் தரவரிசைப் பட்டியல்
வெளியிடப்படும். 7,382
பணியிடங்களுக்கு நடைபெறும் இந்தத்
தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம்
வெளியிடப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url