Science Box questions 7th STD term -II | unit 3. நம்மைச்சுற்றி நிகழும்‌ மாற்றங்கள்‌

7ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
3. நம்மைச்சுற்றி நிகழும்‌ மாற்றங்கள்‌

1. டெல்லியில்‌ உள்ள குதூப்‌ வளாகத்தில்‌ 1600 ஆண்டுகள்‌ பழமை வாய்ந்த ஒரு இரும்புத்தூண்‌ உள்ளது. இவ்வளவு நூற்றாண்டுகள்‌ கடந்தும்‌, எந்தக்‌ கூரையும்‌ இன்றி புறவெளியில்‌ உள்ள அந்த இரும்புத்தூண்‌ துருப்பிடிக்கவில்லை. இதிலிருந்து 16ஆம்‌ நூற்றாண்டிலேயே துருப்பிடித்தலை தவிர்க்கும்‌ உலோகத்‌ தொழில்‌ நுட்பத்தில்‌ இந்திய அறிவியலாளர்கள்‌ சிறந்து விளங்கியது புலனாகிறது.

2. இரும்பின்‌ மீது குரோமியம்‌ அல்லது துத்தநாகம்‌ போன்ற உலோகங்களை ஒரு படலமாகப்‌ பூசுவதும்‌ துருப்பிடித்தலைத்‌ தடுக்கும்‌ ஒரு மாற்று முறையாகும்‌. இம்முறைக்கு நாக
முலாம்‌ பூசுதல்‌ என்று பெயர்‌.

3. லூயிஸ்‌ பாஸ்டியர்‌ (1822-1895) என்ற பிரெஞ்சு வேதியாலர்‌ ஒரு நுண்ணுயிரியலாளரும்‌ ஆவார்‌. இவரே முதன்‌ முதலில்‌ நொதித்தல்‌ என்ற நிகழ்வினை விவரித்தவர்‌ ஆவார்‌.
காற்று அற்ற சூழலில்‌, ஈஸ்ட்‌ என்ற நுண்ணுயிரியின்‌ முன்னிலையில்‌ நிகழும்‌ செயல்‌ நொதித்தல்‌ என்று கூறினார்‌. இவரே ரேபிஸ்‌ என்ற வெறிநாய்கடிக்கும்‌ மருத்துவம்‌
கண்டறிந்தவர்‌.

4. எந்த ஒரு பொருள்‌ ஒரு வேதிவினையில்‌ எந்த மாற்றத்திற்கும்‌ உட்படாமல்‌, வேதி மாற்றத்தின்‌ வேகத்தினை மட்டும்‌ துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு வினையூக்கி என்று பெயர்‌. எடுத்துக்காட்டாக சர்க்கரையின்‌ நொதித்திலில்‌ ஈஸ்ட்டில்‌ உள்ள நொதிகள்‌ வினையூக்கியாக செயல்படுகிறது
Next Post Previous Post