Science Box questions 6th STD term -III | unit 1, 2

6 ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌
1. காந்தவியல்‌

1. காந்தத்தின்‌ திசைகாட்டும்‌ பண்பு பல ஆண்டுகளாக திசையை அறியப்‌ பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

2. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள்‌ காந்த கற்களைக்‌ கட்டி தொங்கவிட்டால்‌,
அவை வடக்கு - தெற்கு திசையிலேயே ஓய்வுநிலைக்கு வருவதைக்‌ கண்டறிந்தனர்‌.
காந்தத்தன்மையுடைய கற்களைக்‌ கொண்டு திசைகாட்டும்‌ கருவிகள்‌ செய்து
பயன்படுத்தினர்‌.

3. சீன மாலுமிகள்‌ தங்கள்‌ படகுகளிலும்‌ கப்பல்களிலும்‌ இத்தகைய கற்களைக்‌ கொண்டு, புயல்காலங்களிலும்‌, மூடுபனி காலங்களிலும்‌ திசையையறிந்து பாதுகாப்பான கடல்‌ பயணங்களை மேற்கொண்டனர்‌.

4. கைபேசி, குறுந்தகடு, கணினி போன்றவற்றிற்கு அருகில்‌ காந்தங்களை வைத்தால்‌,
காந்தங்கள்‌ அதன்‌ காந்தத்தன்மையை இழந்து விடும்‌. அந்தப்‌ பொருள்களும்‌ பாதிப்புக்கு உள்ளாகும்‌.


6 ஆம்‌ வகுப்பு - மூன்றாம்‌ பருவம்‌
2. நீர்

1. நீரானது மண்ணில்‌ உள்ள உப்புகள்‌ மற்றும்‌ தாதுப்பொருள்களை தன்னுடன்‌ கரைத்து எடுத்துச்‌ செல்கிறது. இந்த உப்புகளும்‌ தாதுக்களும்‌ கடல்கள்‌ மற்றும்‌ பெருங்கடல்களில்‌
இலட்சக்கணக்கான ஆண்டுகளாக படிந்து வருகிறது.
 கடலின்‌ அடியில்‌ காணப்படும்‌
எரிமலைகளும்‌ கடல்‌ நீருடன்‌ உப்பினை சேர்க்கின்றன.

2. அதிக அளவு கரைபொருள்‌ கரைந்துள்ள நீரினை நம்மால்‌ பயன்படுத்தவோ அல்லது
பருகவோ இயலாது. இத்தகைய நீரினை நாம்‌ உப்பு நீர்‌ என அழைக்கிறோம்‌.


3. பொதுவான வளிமண்டல அழுத்தத்தில்‌ நீரானது 0° செல்சியஸ்‌ வெப்பநிலையில்‌
பனிகட்டியாக உறைகிறது. ஓவ்வொரு வருடமும்‌ மார்ச்‌ 22 ஆம்‌ தேதி தேசிய உலக நீர்
தினமாகக்‌ கொண்டாடப்படுகிறது.

4. இமயமலை பனிப்படிவுகள்‌, பனிப்பாறைகள்‌ மற்றும்‌ பனியாறுகளைக்‌ கொண்டுள்ளது.
ஆசியாவின்‌ முக்கிய ஆறுகளில்‌ பத்து பெரிய ஆறுகள்‌ இமயமலையில்‌ இருந்து
தொடங்கிப்‌ பாய்கின்றன. ஏறக்குறைய நூறு கோடி மக்களின்‌ வாழ்வாதாரமான
நீர்த்தேவையை இவ்வாறுகள்‌ பூர்த்தி செய்கின்றன.

5. நீரின்‌ கனஅளவை லிட்டர்‌ மற்றும்‌ மில்லி லிட்டர்‌ போன்ற அலகுகளால்‌ அளக்கலாம்‌.
காலன்‌ என்பதும்‌ நீரின்‌ கன அளவினை அளக்கக்கூடிய அலகாகும்‌.

6. ஒரு காலன்‌ என்பது 3.785 லிட்டர்‌ ஆகும்‌. நீத்தேக்கங்களில்‌ உள்ள நீரின்‌ அளவினை TMC/Feet என்ற அலகால்‌ அளக்கப்படுகின்றது. அணைக்கட்டுகளில்‌ இருந்து
திறக்கப்படும்‌ நீரின்‌ அளவு கியூசக்‌ (கன அடி / விநாடி) என்ற அலகால்‌ அளக்கப்படுகிறது

7. பனிக்காலங்களில்‌, குளிர்ந்த நாடுகளில்‌ ஏரிகள்‌ மற்றும்‌ குளங்கள்‌ குளிர்ச்சியடைந்து நீரின்‌ மேற்பரப்பில்‌ திண்மநிலை பனிப்படலங்கள்‌ உருவாகின்றன. இருந்தபோதிலும்‌
பனிப்படலத்திற்கு கீழ்‌ வசிக்கும்‌ நீர்வாழ்‌ விலங்குகள்‌ இறப்பதில்லை. ஏனெனில்‌ மதிக்கும்‌ பனிப்படலமானது ஒரு பாதுகாப்புப்‌ படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம்‌ வெளியேறுவதனை அனுமதிப்பதில்லை. எனவே நீரின்‌ மேற்பரப்பு மட்டுமே
குளிர்ச்சியடைந்து பனியாக மாறுகின்றது. இக்காரணங்கள்‌ நீர்வாழ்‌ விலங்குகளுக்கு
சாதாகமாக அமைந்து அவை உயிர்வாழ உதவுகின்றன.

8. கூவம்‌ ஒரு முகத்துவாரம்‌ - நீர் நிலைகள்‌, கடலைச்‌ சந்திக்கும்‌ ஈர நிலங்களுக்கு
முகத்துவாரம்‌ என்று பெயர்‌. இது நிலத்திலிருந்து நன்னீரும்‌ கடலிலிருந்து உப்பு நீரும்‌
சந்திக்கும்‌ இடமாகும்‌. சில தனித்தன்மையான தாவர மற்றும்‌ விலங்கு வகைகளுக்கு
உறைவிடமாக முகத்துவாரம்‌ அமைகிறது.

9. சதுப்பு நிலங்கள்‌ என்பவை ஈரப்பதம்‌ நிறைந்த காடுகள்‌ ஆகும்‌. அவை பெரிய ஆறுகளைச்‌ சார்ந்தோ அல்லது பெரிய ஏரிகளின்‌ கரைகளிலோ காணப்படும்‌.

10. சதுப்பு நில நீர நன்னீராகவோ, உவர்ப்பு நீராகவோ அல்லது கடல்‌ நீராகவோ இருக்கலாம்‌.

11. உயிரினங்களுக்கு நன்னீரையும்‌, ஆக்ஸிஜனையும்‌ அளிப்பதில்‌ சதுப்பு நிலங்கள்‌ முக்கிய பங்கினை வகிக்கின்றன.

12. சிதம்பரத்தினை அடுத்த பிச்சாவரம்‌ சதுப்பு நிலக்காடுகள்‌, முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகள்‌, சென்னையில்‌ உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம்‌, காஞ்சிபுரத்தில்‌ உள்ள
செம்பரம்பாக்கம்‌ சதுப்புநிலம்‌ ஆகியன தமிழ்நாட்டில்‌ உள்ள சில சதுப்பு நிலங்களாகும்‌.
Next Post Previous Post