டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
🚀 இந்திய ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார்.
🚀 இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர் 1980ஆம் ஆண்டு SLV- III ராக்கெட்டை பயன்படுத்தி ரோகினி - I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.
🚀 இவர் பத்மபூஷண்(1981) பத்மவிபூஷண்(1990) பாரத ரத்னா (1997) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய அக்னி சிறகுகள் இந்தியா 2020 எழுச்சி தீபங்கள் ஆகிய புத்தகங்கள் புகழ் பெற்றவைகள்.
🚀 இவர் 1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். 2002ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுஇ இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக 2007ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வரை பணியாற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் 2015ஆம் ஆண்டு மறைந்தார்.