அக்டோபர் 16- உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) :
அக்டோபர் 16- உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) :
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் நாள் உலக மயக்கவியல் நாள் (World Anaesthesia Day) என அனுசரிக்கப்படுகிறது.
1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள், ஈதரை மயக்க மருந்தாகப் பயன்படுத்தி முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
வலியை அறியாமல் ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை அளிக்க இந்தக்கண்டுபிடிப்பு மிகவும் உதவியது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.
எனவே இந்த நாள் உலக மயக்கவியல் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.