குறியீட்டுச் சிந்தனை- குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2

 

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II

Child Development and Pedagogy Paper 1,2


குறியீட்டுச் சிந்தனை

* குழந்தைகள் தாங்கள் புரிந்துகொண்ட வார்த்தைகள், எண்கள், உருவங்கள் போன்ற குறியீடுகளை உள்ளத்தில் உபயோகப்படுத்தும் திறனே குறியீட்டுச் சிந்தனை எனப்படும்.

* குழந்தைகள் இடைவெளி, காரண காரியம், அடையாளம் காணுதல், வகைப்பாடு செய்தல் மற்றும் எண்ணுருக்கள் இவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி அடைகிறது.

* குழந்தைகள் சிலவற்றை சிசுப் பருவத்திலிருந்தே புரிந்து கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். மற்றவை முன் குழந்தைப் பருவத்தில் வளர ஆரம்பிக்கின்றன. எனினும் பின் குழந்தைப் பருவம் வரை இந்த வளர்ச்சி முழுமை அடைவதில்லை.

* குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு, மொழியால் கருத்துப்பரிமாற்றம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் குறியீட்டுச் சிந்தனையின் வெளிப்பாடுகளே ஆகும்.

* பாவனை விளையாட்டில் குழந்தைகள் தங்களை மருத்துவர் போலவும், ஒட்டிநர் போலவும் உருவகப்படுத்தி கொண்டு விளையாடுகின்றனர்.

* குழந்தைகளின் குறியீட்டுச்சிந்தனைக்கு எண்ணுருக்களும் எழுத்துக்களும் அவசியம். மொழியைப் பயன்படுத்தி குழந்தைகள் வார்த்தைகளைப் பேசுகின்றனர், கேட்கின்றனர்.

* புலன் உணர்ச்சி அல்லது செயல் குறிப்பு இல்லாமல் மனத்தளவில் நடைபெறுவது குறியீட்டுச் சிந்தனையின் தன்மையாகும்.

* குறியீட்டுச் சிந்தனையின் வளர்ச்சி தர்க்க முறை சிந்தனை ஆகும். தர்க்க முறை சிந்தனை என்பது குறியீடுகளில் வரிசைத் தொடரை ஏற்படுத்தி ஒரு முடிவையெடுத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும்.

* ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிரமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று பியஜே குறிப்பிடுகிறார்.

* பியாஜெ மற்றும் அவரது சகாக்கள் குழந்தைகள் தர்க்க சிந்தனை வளர்ச்சியை அனுமானம் செய்வதன் மூலம் ஆரம்பிக்கின்றனர் என்று கருதுகின்றனர்.

* பள்ளிமுன் பருவத்தில் (3-6 ஆண்டுகள்) குழந்தைகள் எண்களைப்பற்றிய 5 விதிகளை ஒரளவு புரிந்துக்கொள்கின்றனர்.

* குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி குழந்தைகள் பொருள்களுக்கு இடையே உள்ள இடைவெளி தொடர்பு பற்றி சரிவர தெரிந்து கொள்ள உதவுகிறது. இதுவே இடைவெளி தர்க்க சிந்தனை எனப்படுகிறது.

* வினைக்கும் பயனுக்கும் இடையே உள்ள காரண காரிய தொடர்பை சிறு குழந்தைகள் அறிந்திருந்தாலும், 2 ஆண்டுகள் வரை காரண காரிய தர்க்க முறை சிந்தனை வளர்ச்சி பெறவில்லை ஏன்? எதற்கு? என பல்வேறு வினாக்களைத் தொடுப்பது குழந்தைகளின் காரண காரிய சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடே.

1 ஒரு பொருளுக்கு ஒர் எண்ணைத் தொடர்பு படுத்துதல். 2. நிலையான எண் வரிசை (1,2,3,4,----) 3. எந்தப் பொருளிலிருந்து எண்ணத் தொடங்கினாலும் மொத்த எண்ணிக்கை சமம். 4. பொருள்களின் மொத்த எண்ணிக்கை கடைசிப் பொருளின் எண்ணாகும். 5. இந்த நான்கு விதிகளும் எந்தப் பொருளுக்கும் பொருந்தும்.

ஐந்து வயதில் குழந்தைகள் 20 மற்றும் அதற்கு மேலும் எண்ண முடிகிறது. ஒன்று முதல் பத்து வரை எண்களின் அளவை அதாவது பெரியது, சிறியது என அறிந்து கொள்ள முடிகிறது.

பள்ளியில் பாடங்களைக் குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்கு வரும்போது அவர்களின் குறியீட்டுச் சிந்தனையும் தர்க்க முறை சிந்தனை வள்ர்ச்சி தொடங்கப் பெற்று இருந்தாலும், அவை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

*  குழந்தைகளின் சிந்தனையில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் குழந்தைகள் அறிதல் திறன் வளர்ச்சியில் முழுமை அடையவில்லை என்பதே ஆகும்.


Next Post Previous Post