Search This Blog

குழந்தைகளின் மொழி வளர்ச்சி - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II Child Development and Pedagogy Paper 1,2

 குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் – I,II

Child Development and Pedagogy Paper 1,2

குழந்தைகளின் மொழி வளர்ச்சி

* மொழி என்பது தனது எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மனதால் வகுக்கப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.

* குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சிக்கு அடிப்படையாக உடல் முதிர்ச்சி(வாய், உதடு ஆகியவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறன்) அமைகிறது.

* பிறந்த குழந்தை உடல் வளர்ச்சி மற்றும் அறிதல் திறன் வளர்ச்சி அடைந்ததும் தனது முதலாவது பிறந்த நாளில் (10 முதல் 14 மாதங்களில்) அடையாளம் காணக்கூடிய தெளிவான உச்சரிப்புடன் கூடிய முதல் சொல்லைப் பேசுகிறது.

* பொதுவாக 18 மாதங்கள் வரை குழந்தைகள் ஒரு தனியான சொல்லைப் பேசி தம் கருத்தைத் தெரிவிக்கிறது.

* 18-24 மாதங்கலில் குழந்தை சிறு வாக்கியங்களை பேசத் தொடங்குகிறது. முதல் முக்கியமான அரு சொற்களைக் கொண்ட வாக்கியங்களைப் பேசுகிறது.

* 20-30 மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை வாக்கியத்தில் அமைத்து பேசுகின்றனர்.

* 12 வயதில் குழந்தையின் சொற்களஞ்சியம் சுமார் 10000க்கும் அதிகமான சொற்களைக் கொண்டதாக உள்ளது.

* குழந்தைகளின் ஒலியெழுப்பும் செயல், மொழித் திறனாக உருவாவதில் 3 படிநிலைகள் உள்ளதாக ஸ்கின்னர் குறிப்பிடுகிறார்.

* குடும்பப் பின்னணியில் பூவா, ஆம், மம்மு போன்ற உணவைக் குறிக்கும் சொற்களை குழந்தை தன் தாயிடமிருந்து கற்கிறது. இதனை குழந்தையின் தாயார் மொழி என்கிறோம்.

* மொழி வளர்ச்சியில் குழந்தைகள் தங்கள் வட்டாரங்களில் வழங்கப்படும் மொழியையே முதலில் கற்றுக் கொள்கின்றனர்.

* குழந்தை உலகத்தோடு இணைந்து செயற்றுவதால் ஏற்படும் தனது வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையிலும் தனக்கு ஏற்படும் சோதனைகளில் கிடைக்கும் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து தன்னுடனான உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுகிறது என்கிறார் எரிக்சன் என்னும் உளவியலார்.

* குடும்பத்தினண் பொருளாதாரச் சூழ்நிலை குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

* உடன்பாட்டு தற்கருத்து கொண்ட மாணவர்கள் வகுப்பறையில் சுறுசுறுப்பாகவும், வெற்றி உணர்வோடும் தன்னம்பிக்கையுடன் திகழ்வார்கள்.

* எதிர்மறை கருத்து கொண்ட மாணவர்கள் பள்ளி இணைக்கம், சமூக இணக்கம், தன்னணக்கம் போன்ற செயல்பாடுகளில் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

* வெற்றி வெற்றியையும், தோல்வி தோல்வியையும் வளர்க்கும் என்கிறது நவீன உளவியல் கோட்பாடு. எனவே மாணவர்களின் திறமை, ஆர்வம், விருப்பத்திற்கேற்ப செயல்பாடுகலில் திறமைகளை ஈடுபடுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

* அவநம்பிக்கை, வெறுப்பு, தோல்வி, உணர்ச்சி, சந்தேகம், பாதுகாப்பற்ற உணர்வு போன்ற எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையில் தற்கருத்து அமைவது எதிர்மறை தற்கருத்து எனப்படும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url