மார்ச் 4 - தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (National Safety Day):
இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி தொழிலாளர்கள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது .
தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966 இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது .
அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.
மும்பையை தலைமையகமாகக்கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன .
அரசியல்சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது .
தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும் , பாதுகாப்பு உணர்வுடனும் , உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.